Thursday, January 3, 2013

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்


bnoபிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான்.
ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது தான் ஆகிறது.ஆனால் அதற்குள் இண்டெர்நெட் உலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.இணைய செய்தி உலகை தீர்மாணிக்க கூடிய செல்வாக்கு மிக்க நபர் என்றும் அடையாளம் காட்டப்படிருக்கிறார்.
பாப்பலுக்கு சொந்தமாக ஒரு செய்தி தளம் இருக்கிறது. அந்த தளம் ஒரு செய்தி நிறுவனமாக வளர்ந்திருப்பதோடு சர்வதேச செய்தி அமைப்பு ஒன்றையும் நிறுவ இருப்பதாகவும் மீடியா நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெருமையோடு அறிவித்துள்ளது.
செய்திக்கடலில் பெரிய திமிங்கலங்கள் எல்லாம் நீந்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது வாலிபரான பாப்பல் இணைய செய்தி உலகில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு புதிய ஏஜென்சியை துவக்க இருபதாகவும் அறிவுத்துள்ளார்.
எப்படி சாத்தியமானது இந்த வளர்ச்சி.செய்தி உலகில் பாப்பல் வயதில் இருப்பவர்களை பொதுவாக குழந்தை என்றே கருத பலரும் தயாராக உள்ள நிலையில் இவர் மட்டும் எப்படி ஒரு நட்சத்திரமாக உருவானார்.
எளிமையான ஆனால் சுவாரஸ்யமான கதை அது.இண்டெர்நெட்டை புரிந்து கொண்ட ஒரு இளைஞனின் வெற்றிக்கதை .
மற்ற வாலிபர்களைப்போல பாப்பலுக்கும் இண்டெர்நெட்டில் உலா வருவது பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.குறிப்பாக அவருக்கு செய்திகளில் ஆர்வம் இருந்தது.இண்டெர்நெட்டில் தான் தளத்திற்கு தளம் தாவிக்கொண்டிருக்க முடியுமே.இப்படி பல செய்தி தளங்களையும் அவற்றில் அவப்போது வெளியாகும் பிரேக்கிங் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருந்த போது பாப்பலுக்கு ஒரு எளிமையான எண்ணம் தோன்றியது.
பலருக்கும் தோன்றக்கூடிய எண்ணம் தான்.எல்லா பிரேக்கிங் செய்திகலையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.இது தான் அந்த எண்ணம்.இப்படி ஒரே இடத்தில் உடனுக்குடன் பிரேக்கிங் செய்திகளை படிப்பதன் மூலம் புதிய பெரிய செய்திகளை அவைவெளியாகும் போதே தெரிந்துகொள்ளலாம்.இதற்காக வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணம் அவருக்கு உதயமாயிற்று.ஆனால் அப்போது செய்திகளை திரட்டித்தரும் தலங்கள் இருந்தனவே தவிர பிரேக்கிங் செய்திகளுக்கான திரட்டி எதுவும் இல்லை.பாப்பல் தானே அத்தகைய சேவையை துவக்க முடிவு செய்தார்.
இப்போது பிரப்லமாக இருக்கும் டிவிட்டர் குறும்பதிவு செவையை இதற்காக பயன்படுத்திக்கொள்ள தீர்மாணித்தார்.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இரன்டு ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் இத்தனை பிரபலமாகவில்லை என்பது தான்.
டிவிட்டர் பயன்பாடு ஒஅரவலாகாத நிலையில் அதன் அருமையை உணர்ந்திருந்த பாப்பல் டிவிட்டரில் ஒரு கனக்கு துவக்கி தான் பார்க்கும் பிரேக்கிங் செய்திகளை பகிர்ந்து கொள்ள துவங்கினார்.
ப்ரேக்கிங் நியுஸ் என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.புதிய பெரிய செய்திக்காக வலை வீசிக்கொண்டே இருப்பது அவை கண்ணில் பட்டவுடன் டிவிட்டரில் தெரிவிப்பது என அவர் தீவிரம் காட்டினார்.
இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கவே பலரும் அவர் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர தொடங்கினர்.மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க துவங்கினர்.விளைவு இந்தசேவை விரைவிலேயே பிரபலமாக்த்துவங்கியது.
இந்த சேவையை எதிர்கொண்டவர்கள் அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து போயினார். செய்திப்பசி கொன்டவர்கள் இந்த சேவையை பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தனர்.இந்த நேரத்தில் தான் ஒசாமா பின் லேடனின் வீடியோ கோப்பு ஒன்று எப்படியோ பாப்பலின் கைகளில் கிடைத்தது.மற்ற செய்தி நிறுவனங்களுக்கெல்லாம் கிடைக்காமல் தனது கைகளில் க்டைத்தாந்த வீடியோவை அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டர்.
அப்பொது தான் அவருக்கு தீவிரமாக செயல்பட்டால் பெரிய நிறூவனங்களை முந்திக்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிகை ஏற்பட்டது.செய்தியை தொகுத்து தருவதே சிறந்த வழி என்ற உறுதியும் உண்டானது.
தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளை தொகுத்து அளித்து வந்தவருக்கு பல நாடுகளில் இருந்து வாசகர்கள் கிடைத்தனர்.இதனையடுத்து பிரேக்கிங் நியுஸான்லைன் என்னும் இணையதளத்தை ஏற்படுத்தினார்.
வரவேற்பு பிரமாதமாக் இருந்த்தை அடுத்து தனது கீழ் பணியாற்ற செய்தி ஆசிரியர்களையும் நியமித்துக்கொண்டார். இன்று முழுவீச்சிலான செய்தி தளமாக உருவாகியுள்ளது. சர்வதேச செய்தி ஏஜென்சியை துவக்கப்போவதாக அறிவிக்கும் அலவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.
குறிப்பிட்ட நாளில் எந்த செய்தி நிறூவனம் வேண்டுமானால் பிரேக்கிங் செய்தியை வெளியிடலாம். எந்த நிறுவனம் வேணுமானால் கோட்டை விடலாம். ஆனால் அவற்றை தொகுத்து அளிப்பதன் மூலம் பி என் ஓ மட்டும் முன்னிலைல் இருக்கும் எண்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இண்டெர்நெட் செய்தி மற்றும் நாளிதழ்களின் வருவாயை பாதித்து அவற்றின் செயல்பாட்டிற்கே வேட்டு வைத்து வருவதாக கருதப்படும் நிலையில் பாப்பல் புதிய பெரிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு செய்தி சம்பிராஜ்யத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment